search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கணவர் கைது"

    • விசாரணையில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கொலை செய்ததாக ஸ்ரீதர் போலீசாரிடம் தெரிவித்து உள்ளார்.
    • நடத்தை சந்தேகத்தில் தூங்கிய மனைவி மீது அம்மிக்கல்லை போட்டு கணவர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    காஞ்சிபுரம்:

    வாலாஜாபாத் அருகே உள்ள சங்கராபுரம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது45). கல் குவாரியில் தொழிலாளியாக வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி செல்வராணி(35). இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

    ஸ்ரீதர் மதுகுடித்து வந்து மனைவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார். இதனால் கணவன்-மனைவி இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் நேற்று இரவும் மதுபோதையில் வந்த ஸ்ரீதர் மனைவியிடம் கடும் வாக்குவாதம் செய்தார். பின்னர் கணவன் -மனைவி இருவரும் தூங்கிவிட்டனர்.

    எனினும் ஆத்திரத்தில் இருந்த ஸ்ரீதர் மனைவியை கொலை செய்ய திட்டமிட்டார்.

    அதிகாலை 4 மணிஅளவில் எழுந்த ஸ்ரீதர் தூங்கிக்கொண்டு இருந்த மனைவி செல்வராணியின் தலையில் அருகில் கிடந்த அம்மிக்கல்லை தூக்கிப்போட்டார். இதில் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே செல்வராணி துடிதுடித்து இறந்தார். சத்தம் கேட்டு எழுந்த அவர்களது குழந்தைகள் தாய் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு பயத்தில் அலறினர்.

    இதைத்தொடர்ந்து ஸ்ரீதர் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு மனைவியை கொலை செய்து விட்டதாக தெரிவித்தார். தகவல் அறிந்ததும் வாலாஜாபாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகர், சாலவாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிஷோர்குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். எடமச்சி பஸ் நிறுத்தம் அருகே நின்ற ஸ்ரீதரை போலீசார் கைது செய்தனர். கொலையுண்ட செல்வராணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கொலை செய்ததாக ஸ்ரீதர் போலீசாரிடம் தெரிவித்து உள்ளார்.

    கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    நடத்தை சந்தேகத்தில் தூங்கிய மனைவி மீது அம்மிக்கல்லை போட்டு கணவர் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஜெயங்கொண்டம் அருகே ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் மது போதையில் மனைவியை அறிவாளால் வெட்டிய கணவன் கைது
    • அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஸ்ரீபுரந்தான் காலனி தெருவை தெருவை சேர்ந்தவர் சங்கர் மனைவி ஐஸ்வர்யா (29) இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளன .இந்நிலையில் சங்கர் இவரது மனைவி ஐஸ்வர்யா இருவருக்கும் இடையில் குடும்ப தகராறு இருந்து வந்ததாகவும், இதனால் அடிக்கடி இவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது . இந்நிலையில் வீட்டிற்கு மது குடித்து விட்டு வந்த சங்கர் அவரது மனைவி ஐஸ்வர்யாவிடம் வாய் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்பு ஆத்திரமடைந்த சங்கர் வீட்டில் வைத்திருந்த அரிவாளை எடுத்து ஐஸ்வர்யாவின் இரண்டு கைகளிலும் மணிக்கட்டு பகுதியில் அரிவாளால் வெட்டி உள்ளதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த ஐஸ்வர்யாவை அங்கிருந்த உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஐஸ்வர்யா சிகிச்சை பெற்று வருகிறார் . இது குறித்து விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் ஐஸ்வர்யா அளித்த புகாரின் பேரில் விக்கிரமங்கலம் காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன் வழக்கு பதிவு செய்து சங்கரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • அடிக்கடி மது குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்தார்.
    • இதனால் தனலட்சுமி கோபித்துக்கொண்டு விவாகரத்து கேட்டு கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.

    மேலசொக்கநாதபுரம்:

    போடியை சேர்ந்தவர் அலெக்ஸ்பாண்டியன் (வயது27). இவரது மனைவி தனலட்சுமி (25). இவர்க ளுக்கு 2 மகன்கள் உள்ளனர். அலெக்ஸ்பாண்டியன் முனிசிபல் அலுவலகத்தில் தெருவிளக்கு பொருத்தும் வேலை பார்த்து வருகிறார். அடிக்கடி மது குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்தார்.

    இதனால் தனலட்சுமி கோபித்துக்கொண்டு விவாகரத்து கேட்டு கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். 2 பேரும் 2 மாதம் சேர்ந்து வாழ நீதிபதி அறிவுரை வழங்கி உள்ளார்.இந்த நிலையில் மீண்டும் தகராறில் ஈடுபட்ட அலெ க்ஸ்பாண்டியன் தனலட்சு மியை தகாத வார்த்தையால் திட்டி தாக்கினார். இது குறித்து போடி நகர் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு ப்பதிவு செய்து அலெக்ஸ்பா ண்டியனை கைது செய்தனர்.

    • தூங்கிக் கொண்டிருந்த மனைவியை கணவர் அம்மிக்கல்லை போட்டு கொன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
    • நாமகிரிபேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து மனைவியை கொலை செய்த அவரது கணவர் கோவிந்தனை கைது செய்தனர்.

    ராசிபுரம்:

    சேலம் அருகே உள்ள கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 39). கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி ராதா (33). வீட்டு வேலைக்கு சென்று வந்தார்.

    இந்த தம்பதியினருக்கு கனிஷ்கா (11) என்ற 1 மகளும், கோகுல் (7) என்ற 1 மகனும் உள்ளனர்.

    இந்த நிலையில் ராதா குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதையொட்டி கடந்த 3 மாதங்களாக நாமகிரிபேட்டை அருகே உள்ள ஈச்சப்பாறையில் மாமனார் ரமனா (63) குடும்பத்தினருடன் கோவிந்தன், அவரது மனைவி ராதா, குழந்தைளுடன் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் கோவிந்தனுக்கு மனைவி ராதாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு 11 மணியளவில் குடிபோதையில் இருந்த கோவிந்தன், குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்த மனைவி ராதாவின் தலையில் அம்மிக்கல்லை போட்டு சரமாரியாக தாக்கினார்.

    இதை கண்ட குழந்தைகள் சத்தம் போட்டனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அங்கு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ராதாவை நாமகிரிப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு சென்று சேர்த்தனர். அப்போது ராதாவை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். பிறகு ராதாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது பற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், ராசிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம், நாமகிரிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    இது பற்றி நாமகிரிபேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து மனைவியை கொலை செய்த அவரது கணவர் கோவிந்தனை கைது செய்தனர்.

    தூங்கிக் கொண்டிருந்த மனைவியை கணவர் அம்மிக்கல்லை போட்டு கொன்ற சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    • முத்துவள்ளி கடந்த மாதம் 30-ந்தேதி நாலூர் விலக்கு பகுதியிலுள்ள தனது கணவரான பழனியின் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • குடும்ப தகராறில் முத்துவள்ளி தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது கொலை செய்து தூக்கில் தொங்கவிடப்பட்டாரா? என்பது உள்ளிட்ட கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    திருச்சுழி:

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகேயுள்ள கட்டாலங்குளம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் மகன் பழனி (வயது 27). இவர் டிப்பர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கும் பனைக்குடி பகுதியை சேர்ந்த பாண்டி மகள் முத்துவள்ளி (24) என்பவருக்கும் கடந்த 2018-ல் திருமணம் நடந்தது.

    திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகியும் இந்த தம்பதியினருக்கு குழந்தையில்லை. பழனி லாரி டிரைவராக பணிபுரிந்து வருவதால் அடிக்கடி வெளியூருக்கு சென்று தங்கிக்கொள்வது வழக்கம். இருந்தபோதிலும் தினமும் மனைவியுடன் செல்போனில் பேசி நலம் விசாரித்து கொள்வதை வாடிக்கையாக வைத்திருந்தார்.

    காலப்போக்கில் மனைவியுடனான நெருக்கம் குறைந்ததாக பழனி எண்ணினார். மேலும் சாவரியை முடித்துவிட்டு ஊருக்கு திரும்பும் சமயங்களில் மனைவி தன்னுடன் அதிகம் பேசுவதை தவிர்த்து வந்ததாகவும் எண்ணி கவலைப்பட்டார். இதுவே நாளுக்கு நாள் அவரது மனதில் புரையோடி வளர்ந்தது. அது மனைவி முத்துவள்ளியின் நடத்தையில் சந்தேகப்படும் அளவுக்கு வந்தது.

    இதையடுத்து பழனி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊரை காலி செய்து விட்டு, மதுரை அவனியாபுரம் பகுதியில் வாடகை வீட்டில் குடியேறினார். அங்கு கணவன், மனைவி இருவரும் குடும்பம் நடத்தி வந்தனர். ஒருபுறம் குழந்தை இல்லாத ஏக்கம், மறுபுறம் மனைவியின் நடத்தை மீதான சந்தேகம் இரண்டும் சேர்ந்து பழனியை பாடாய்படுத்தியது.

    அதுவே தம்பதிக்கிடையே பகையாக வளர்ந்து தகராறை ஏற்படுத்தியது. அப்போதெல்லாம் பழனி, தனது மனைவி முத்துவள்ளியை அடித்து, உதைத்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த முத்துவள்ளி கணவரை பிரிந்து, தனது சொந்த ஊரான பனைக்குடி கிராமத்திற்கு சென்றுவிட்டார். அங்கு தாய் முத்துமாரியுடன் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் இருவீட்டாரின் உறவினர்கள் பழனி, முத்துவள்ளி இருவரையும் அழைத்து பேசி சமாதானப்படுத்தி மீண்டும் கணவருடன் சென்று குடும்பம் நடத்த அனுப்பி வைத்தனர். ஆனால் இருவருக்கிடையேயான பிரச்சினை தீர்ந்தபாடில்லை.

    இதற்கிடைய முத்துவள்ளி கடந்த மாதம் 30-ந்தேதி நாலூர் விலக்கு பகுதியிலுள்ள தனது கணவரான பழனியின் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது அக்காள் கார்த்தீஸ்வரி தங்கையான முத்துவள்ளியின் சாவில் சந்தேகம் இருப்பதாக அ.முக்குளம் போலீஸ் நிலையத்தில் புகாரளித்தார்.

    அதன்பேரில் சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறில் முத்துவள்ளி தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது கொலை செய்து தூக்கில் தொங்கவிடப்பட்டாரா? என்பது உள்ளிட்ட கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் திருச்சுழி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகநாதன் தலைமையில் அ.முக்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட முத்துவள்ளியின் உடலில் காயங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    அவரது நாடியின் கீழ்பகுதி, நெஞ்சு, கழுத்து உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காணப்பட்ட காயங்களால் சந்தேகமடைந்த போலீசார் அவரது கணவர் பழனியிடம் அதிரடியாக விசாரணையை தொடங்கினர். இதில் பழனி தனது மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

    இதுதொடர்பாக அவர் போலீசிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், சம்பவத்தன்று முத்துவள்ளியின் நடத்தையின் மீது ஏற்கனவே ஏற்பட்ட சந்தேகம் காரணமாக கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாகவும், வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த பழனி, முத்துவள்ளியை அடித்துக்கொன்றதும் தெரிவித்துள்ளார். கொலையை மறைக்கவே முத்துவள்ளி தனக்குத்தானே தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறி தான் நாடகமாடியதாகவும் தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து தற்கொலை வழக்கானது கொலை வழக்காக மாற்றப்பட்டது. மேலும் மனைவியை அடித்துக்கொலை செய்த கணவர் பழனியை போலீசார் கைது செய்தனர். பின்னர் அருப்புக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பழனி போலீசார் சிறையில் அடைத்தனர்.

    • சந்த் பாஷாவிற்கு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.
    • சிறிது நாட்களாக சபிஹா வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், சித்தூரை சேர்ந்தவர் சந்த் பாஷா. இவர் பலமனேர் அரசு போக்குவரத்து பணிமனையில் ஊர்க்காவல் படை வீரராக வேலை செய்து வருகிறார்.

    இவரது மனைவி சபிஹா. இவர்களது திருமணம் கடந்த 2017-ம் ஆண்டு நடந்தது. இவர்களுக்கு 3 பெண் பிள்ளைகள் உள்ளனர்.

    மனைவிக்கு அடுத்தடுத்து 3 பெண் குழந்தைகள் பிறந்ததால் சந்த் பாஷாவுக்கு மனைவி மீது கடும் ஆத்திரம் ஏற்பட்டது.

    சந்த் பாஷா அவரது பெற்றோர் மற்றும் சகோதரிகள் என குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து சபிஹாவை அடித்து உதைத்து சித்ரவதை செய்தனர்.

    இதனால் சபிஹா அடிக்கடி தனது தாய் வீட்டுக்கு சென்று விடுவது வழக்கம். மேலும் கணவர் குடும்பத்தினர் சித்ரவதை செய்வது குறித்து அவரது பெற்றோர் போலீசில் 3 முறை புகார் அளித்தனர்.

    போலீசார் 3 முறையும் இவரது குடும்பத்தாரையும் அழைத்து சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் சந்த் பாஷா மற்றும் அவரது குடும்பத்தினர் தங்களுக்கு ஆண் வாரிசு ஒன்று தேவை என்ற கட்டாயத்திற்கு வந்தனர். இதனால் சந்த் பாஷாவிற்கு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

    சபிஹாவை மொட்டை மாடியில் உள்ள கழிவறைக்கு அழைத்துச் சென்று கைவிரல்களை உடைத்தனர். பின்னர் அந்த அறையிலேயே அடைத்து வைத்து உணவு கொடுக்காமல் சித்ரவதை செய்தனர். சபிஹா கழிவறையில் தண்ணீரை குடித்து உயிர் பிழைத்து வந்தார்.

    சிறிது நாட்களாக சபிஹா வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அவர்கள் போலீசில் புகார் செய்தனர். போலீசார் சந்த் பாஷா வீட்டிற்கு சென்று சோதனை நடத்திய போது சபிஹாவை சிறிய அறையில் அடைத்து வைத்து கை விரல்களை உடைத்து உணவு கூட வழங்காமல் சித்ரவதை செய்தது தெரியவந்தது.

    மனைவியை சித்ரவதை செய்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்து சந்த் பாஷா அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் அனைவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • சிவா, சுரேஷ் வீட்டிற்கு வந்து பரமேஸ்வரியிடம் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார்.
    • சிவாவை அசிங்கமாக திட்டி தகராறில் ஈடுபட்டுள்ளார்.

    விழுப்புரம்:

    செஞ்சி அருகே உள்ள நல்லான் பிள்ளை பெற்றால் என்ற ஊரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 32). கூலித் தொழிலாளி. இவரது மனைவி பரமேஸ்வரி (29). கடந்த 7-ந்தேதி சுரேஷ் வேலைக்கு சென்றவுடன் பரமேஸ்வரி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அதே ஊரை சேர்ந்த சிவா, சுரேஷ் வீட்டிற்கு வந்து பரமேஸ்வரியிடம் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார்.

    தண்ணீர் எடுத்து வர பரமேஸ்வரி சென்றார். அவரை பின்தொடர்ந்த சிவா, பரமேஸ்வரியிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். அப்போது பரமேஸ்வரி கூச்சலிடவே, சிவா தப்பியோடியதாக தெரிகிறது. இது குறித்து நல்லான்பிள்ளைபெற்றால் போலீசில் பரமேஸ்வரி புகார் அளித்தார்.சப்-இன்ஸ்பெக்டர் சையது முகமது அலி வழக்கு பதிவு செய்து தலைமறைவான சிவாவை தேடி வந்தார்.


    இந்நிலையில் நேற்று சிவாவை போலீசார் கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்து கொண்டு இருந்தனர். இத்தகவல் அறிந்த பரமேஸ்வரியின் கணவர் சுரேஷ் டாஸ்மாக்கிற்கு சென்று மது அருந்தினார். குடிபோதையில் போலீஸ் நிலையம் சென்றார். அங்கிருந்த சிவாவை அசிங்கமாக திட்டி தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும், அங்கிருந்த போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீஸ் நிலைய எழுத்தர் புவனேஸ்வரன் அளித்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்து சுரேஷை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் நல்லான் பிள்ளை பெற்றால் போலீஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    • மனைவியை கொலை செய்து விட்டு சாமியாராக மாறிய ரமேஷ் கைது செய்யப்பட்டார்.
    • சாமியாராக மாறிய பிறகு பிச்சை எடுத்தே சாப்பிட்டு வந்தேன்.

    சென்னை:

    சென்னை ஓட்டேரி ஏகாங்கி புரத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவர் தனது காதல் மனைவி வாணியை 2 ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்து விட்டு தப்பிச் சென்றார்.

    இதுதொடர்பாக ஓட்டேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். கொலையாளி ரமேஷ் போலீசில் பிடிபடாத நிலையில் தற்போதைய ஓட்டேரி இன்ஸ்பெக்டர் ஜானி செல்லப்பா தலைமறைவான ரமேசை தேடி வந்தார். மனைவியை கொலை செய்து விட்டு சாமியாராக மாறிய ரமேஷ் கைது செய்யப்பட்டார்.

    2 ஆண்டுகளுக்கு பிறகு போலீசில் சிக்கியுள்ள ரமேஷ் மனைவி வாணியை கொலை செய்தது ஏன்? என்பது பற்றியும், சாமியாராக மாறியது குறித்தும் பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளார். அதன் விவரம் வருமாறு:-

    நானும், வாணியும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். 2 மகன்கள் பிறந்த நிலையில் வாணி வேலைக்கு சென்று விட்டு தாமதமாக வீடு திரும்பி வந்தாள். இது எனக்கு அவள் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதுபற்றி நான் அடிக்கடி கேட்டு வந்தேன்.

    அப்போது வாணி என்னை திட்டுவதையே வழக்கமாக வைத்திருந்தார். இது எனக்கு எரிச்சலை ஏற்படுத்தி வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று தாமதமாக வந்த வாணியிடம் அதுபற்றி கேட்டேன்.

    அப்போது நீ என்ன ஒழுங்கா? என்று கூறி வாணி என்னிடம் சண்டை போட்டாள். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

    இதனால் எரிச்சல் அடைந்த நான் வாணியை சரமாரியாக தாக்கினேன். இதில பலத்த காயம் அடைந்த அவள் உயிரிழந்தாள். இதனால் என்ன செய்வது? என்று தெரியாமல் உடலை மூட்டை கட்டி கட்டிலுக்கு கீழே வீசிவிட்டு தப்பிச் சென்றேன்.

    மக்கள் கூட்டமாக இருக்கும் இடத்துக்கு சென்று விட்டால் அடையாளம் காண்பது சிரமம் என்று நினைத்து திருவண்ணாமலைக்கு சென்றேன். அங்கு சில நாட்கள் சுற்றி திரிந்து விட்டு திருப்பூருக்கு சென்று அங்கு வேலை செய்தேன்.

    அப்போது உடல்நிலை சரியில்லாமல் போனது. இதனால் அங்கிருந்து வடலூர் ஆசிரமத்துக்கு சென்றேன். அங்கு வைத்து சாப்பாடுகூட கிடைக்காமல் திண்டாடினேன். பின்னர்தான் சாமியாராக மாறினால் என்ன? என்கிற எண்ணம் ஏற்பட்டது. மீண்டும் திருவண்ணாமலைக்கு சென்று அங்கிருந்த சாமியார் ஒருவரிடம் தீட்சை எடுத்து ருத்திராட்ச மாலையை அணிந்து கொண்டு காவி உடையை உடுத்தினேன். பின்னர் அப்படியே பல ஊர்களுக்கு சென்றேன். மனைவியை கொலை செய்த பாவம்தான் தன்னை துரத்துகிறது என்று எண்ணி பாவத்துக்கு பரிகாரம் தேடுவதாக நினைத்து காசி உள்ளிட்ட புண்ணிய தலங்களுக்கு சென்றேன்.

    ரிஷிகேஷ், பூரி ஜெகநாதர் கோவில், உத்தரகாண்ட் உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு சென்று விட்டு தமிழகத்துக்கு திரும்பினேன். சாமியாராக மாறிய பிறகு பிச்சை எடுத்தே சாப்பிட்டு வந்தேன். அதன் மூலம் கிடைக்கும் சிறிய தொகையை வேறு ஒரு சாமியாரின் செல்போன் எண்ணில் இருந்து ஜி.பே. மூலமாக மகன்களுக்கு பணம் அனுப்பி வந்தேன்.

    போலீசில் சிக்கி விடக்கூடாது என்பதற்காக செல்போன் பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்த்து வந்தேன். இந்த நிலையில்தான் சென்னைக்கு வந்த இடத்தில் போலீசில் சிக்கிக் கொண்டேன்.

    இவ்வாறு ரமேஷ் வாக்குமூலம் அளித்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    • விநாயகம் கூலி வேலைக்கும், மனைவி கிரிஜா வீட்டு வேலைக்கும் சென்று வந்தனர்.
    • அடிக்கடி கணவன்-மனைவிக்கு இடையே தகராறு இருந்து வந்தது.

    திருத்தணி:

    திருத்தணி நரசிம்மசுவாமி கோவில் தெருவில் வசிப்பவர் விநாயகம் (42). இவருக்கும் கிரிஜா (34) என்பவருக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு தேவா என்கிற மகன் உள்ளார். இவர் அரக்கோணத்தில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்கள் கடந்த 14 வருடங்களாக பெங்களூரில் கூலி வேலை செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கடந்த 15 நாட்களுக்கு முன்பு திருத்தணியில் வந்து நரசிம்ம சுவாமி கோவில் தெருவில் உள்ள வீட்டில் வாடகைக்கு தங்கி உள்ளனர்.

    இந்த நிலையில் விநாயகம் கூலி வேலைக்கும், மனைவி கிரிஜா வீட்டு வேலைக்கும் சென்று வந்தனர். அடிக்கடி கணவன்-மனைவிக்கு இடையே தகராறு இருந்து வந்தது. நேற்று இரவு வழக்கம் போல் தூங்கிக் கொண்டிருந்த மனைவியை விநாயகம் நள்ளிரவில் கத்தியை எடுத்து தலை, கை, கால், மார்பு என பல பகுதிகளில் சரமாரியாக வெட்டி உள்ளார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்துள்ளனர். ஆனால் விநாயகம் வீட்டில் உள்பக்கமாக பூட்டு போட்ட காரணத்தால் யாரும் உள்ளே சென்று காப்பாற்ற முடியவில்லை.

    இதற்கிடையே வெட்டப்பட்ட கிரிஜா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்து போனார். திருத்தணி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விநாயகத்தை கைது செய்து அவரிடம் இருந்த கத்தியை பறிமுதல் செய்தனர். இறந்து போன கிரிஜாவின் உடலை கைப்பற்றி திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    • கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
    • பவித்ரா அடிக்கடி செல்போனில் பேசி வந்ததால் அவரது நடத்தையில் மணிகண்டன் சந்தேகமடைந்தார்.

    திருப்பூர்:

    திருப்பூர் கொங்கு மெயின்ரோடு டி.எம்.எஸ்.நகர் 4-வது வீதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 36). இவரது சொந்த ஊர் மதுரை. இவர் திருப்பூர் கொங்கு மெயின்ரோடு பகுதியில் பூ வியாபாரம் செய்து வந்ததுடன் அங்குள்ள கோவிலில் பூசாரியாக இருந்து வந்தார். இவரது மனைவி பவித்ரா (23). இவர்களுக்கு 1½ வயதில் மகன் உள்ளான். மணிகண்டனுக்கு பவித்ரா 2-வது மனைவி ஆவார். அதுபோல் பவித்ராவும் ஏற்கனவே திருமணமானவர். 2-வதாக மணிகண்டனை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தார்.

    இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் இருவரும் மாறி, மாறி கைகளால் தாக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது. ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றி கோபத்தின் உச்சிக்கே சென்ற மணிகண்டன் வீட்டில் இருந்த அரிவாளால் பவித்ராவின் தலையை வெட்டிக்கொலை செய்தார்.

    சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வீட்டிற்கு விரைந்து சென்றனர். அப்போது தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பவித்ரா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

    உடனடியாக இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் அங்கிருந்த மணிகண்டனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

    அப்போது மனைவியை கொன்றதற்கான காரணம் குறித்து பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.

    குழந்தை இல்லாததால் மணிகண்டன் முதல் மனைவியை பிரிந்து 2-வதாக பவித்ராவை திருமணம் செய்தார். பவித்ராவும் முதல் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்த அவர்கள் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு குழந்தையும் பிறந்தது.

    இந்தநிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும் பவித்ரா அடிக்கடி செல்போனில் பேசி வந்ததால் அவரது நடத்தையில் மணிகண்டன் சந்தேகமடைந்தார்.

    மேலும் பவித்ராவின் தாய் வேறு ஒருவருடன் பழகி வந்துள்ளார். இது மணிகண்டனுக்கு பிடிக்கவில்லை. எனவே பவித்ராவை தாயுடன் பேச வேண்டாம் என கண்டித்துள்ளார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

    நேற்று தகராறு ஏற்படவே மணிகண்டன் தனது குழந்தையை அக்கா வீட்டில் விட்டு விட்டு வீட்டிற்கு வந்தார். ஆத்திரத்தில் இருந்த அவர் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து பவித்ராவை சரமாரியாக வெட்டினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆத்திரம் தீராத மணிகண்டன் பவித்ராவின் தலையை துண்டித்தார். தலையில் மட்டும் 22 இடங்களில் வெட்டினார். துண்டிக்கப்பட்ட தலையை ஒரு கூடையில் வைத்து வெளியே கொண்டு செல்ல திட்டமிட்டார். அதற்குள் சத்தம் கேட்டு பொதுமக்கள் அங்கு வந்து விட்டனர்.

    இதையடுத்து போலீசார் அங்கு வந்து மணிகண்டனை கைது செய்தனர். மேலும் பவித்ராவின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கைதான மணிகண்டனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • நளினி தேவி (வயது 50). இவரது கணவர் இரும்பாலை கணபதிபாளையம் பகுதியைச் சேர்ந்த ராமமூர்த்தி (55). இவர்கள் கடந்த 2 ஆண்டாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
    • நளினி தேவிக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததால், ஆத்திரமடைந்த ராமமூர்த்தி சமூக வலைத்தளத்தில் நளினிதேவி குறித்து தரமற்ற வார்த்தைகளால் சித்தரித்து வெளியிட்டதாக கூறப்படுகிறது.

    சேலம்:

    சேலம் இரும்பாலை அருகே உள்ள தளவாய்பட்டி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் நளினி தேவி (வயது 50). இவரது கணவர் இரும்பாலை கணபதிபாளையம் பகுதியைச் சேர்ந்த ராமமூர்த்தி (55). இவர்கள் கடந்த 2 ஆண்டாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

    மேலும் இது தொடர்பாக இருவரும் சேலம் குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதில் நளினி தேவிக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததால், ஆத்திரமடைந்த ராமமூர்த்தி சமூக வலைத்தளத்தில் நளினிதேவி குறித்து தரமற்ற வார்த்தைகளால் சித்தரித்து வெளியிட்டதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து நளினி தேவி சேலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து ராமமூர்த்தியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • விசாரணையில் கணவன்-மனைவி இடையே கடந்த 2 நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது தெரிய வந்தது.
    • ஆத்திரமடைந்த சந்திரன் தனது மனைவி சித்ராவின் முகத்தை துணியால் மூடி சரமாரியாக தாக்கி உள்ளார்.

    தென்காசி:

    தென்காசி நடுமாதா கோவில் தெருவை சேர்ந்தவர் சந்திரன். இவரது மனைவி சித்ரா (வயது 50). இவர் பீடி சுற்றும் தொழிலாளி.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களாக இவரது வீடு பூட்டியே கிடந்துள்ளது. இதையறிந்து அங்கு வந்த சித்ராவின் தம்பி குற்றாலநாதன், சந்திரனின் செல்போனை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது தனது அக்கா குறித்து கேட்டதாகவும், அதற்கு சித்ராவிற்கு உடல்நிலை சரியில்லை என்றும் அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்து இருப்பதாகவும், தானும் அங்கேயே அவருடன் இருப்பதாக கூறி சந்திரன் போன் இணைப்பைத் துண்டித்துள்ளார். தொடர்ந்து மீண்டும் சந்திரனை தொடர்பு கொண்ட போது போன் இணைப்பு சுவிட்ச்-ஆப் என வந்துள்ளது.

    இதனால் சந்தேகம் அடைந்த குற்றாலநாதன், அக்காவின் வீட்டிற்கு சென்று பார்த்த போது அங்கிருந்து துர்நாற்றம் வீசி உள்ளது. இதனால் உடனடியாக தென்காசி போலீசாருக்கு அவர் தகவல் அளித்துள்ளார்.

    தென்காசி டி.எஸ்.பி. நாகசங்கர் மற்றும் அனைத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் காளீஸ்வரி ஆகியோர் அடங்கிய போலீசார் நேரடியாக வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தி வீட்டின் பூட்டை உடைத்து வீட்டுக்குள் சென்று பார்த்த பொழுது அங்கு கட்டிலில் கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் சித்ரா பிணமாக கிடந்தார். அவரது முகமும் சிதைக்கப்பட்டு இருந்தது.

    பின்னர் போலீசார் சித்ராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தொடர் விசாரணையில் கணவன்-மனைவி இடையே கடந்த 2 நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது தெரிய வந்தது. இதில் ஆத்திரமடைந்த சந்திரன் தனது மனைவி சித்ராவின் முகத்தை துணியால் மூடி சரமாரியாக தாக்கி உள்ளார். மேலும் கை-கால்களையும் கை, கால்களை கட்டி முகத்தை அமுக்கி கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது.

    இந்நிலையில் திருச்செந்தூர் பகுதியில் சந்திரன் சுற்றி திரிவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் 15 பேர் கொண்ட போலீஸ் குழுவினர் திருச்செந்தூர் விரைந்தனர். அங்கு அன்னசத்திரம் அருகே நின்ற சந்திரனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

    சந்திரனை தென்காசிக்கு அழைத்து வந்து போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×